search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முருகன் கோவில்"

    • 18 வகை திரவியங்களால் முருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
    • ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பல்லடம்:

    பல்லடம் வட்டாரத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதன்படி பல்லடம் காந்தி ரோடு, தண்டாயுதபாணி கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜையும் வழிபாடும் நடைபெற்றது. இதில் சந்தனம்,பால், தயிர், தேன், உள்ளிட்ட 18 வகை திரவியங்களால் முருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். இதேபோல பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில்,பொன்காளியம்மன் கோவில், மாதப்பூர் முத்துக்குமார சுவாமி மலை கோவில், உள்ளிட்ட கோவில்களில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.

    • பால், பன்னீர், ஐந்தமுதம், சந்தனம், தேன், இளநீர் முழுக்குகள், அலங்கார தீபாராதனை நடைபெறும்
    • அனைத்து விதமான மலர்கள் கொண்டு மலர் முழுக்கு தொடங்குகிறது.

    தோவாளை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நாளை மறுநாள்(11-ந்தேதி) மலர் முழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்த ஆண்டு 54-வது மலர் முழுக்கு விழாவை முன்னிட்டு அதிகாலையில் காக்கும் விநாயகர் கோவி லில் கணபதி வேள்வி நடத்தப்படு கிறது. தொ டர்ந்து சுப்ரமணிய சுவா மிக்கு திருநீர் முழுக்கு நடக்கிறது.

    இதை முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தொடங்கி வைக்கிறார்.

    அதன் பின்பு பால், பன்னீர், ஐந்தமுதம், சந்தனம், தேன், இளநீர் முழுக்குகள், அலங்கார தீபாராதனை நடைபெறும். இரவு அனைத்து விதமான மலர்கள் கொண்டு மலர் முழுக்கு தொடங்குகிறது.

    நள்ளிரவு முருகப்பெரு மான் தோகை மயில் முருகப் பெருமானாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அதன் பின்பு அருள்பிரசாதம் வழங்கப்படும். நிகழ்ச்சியை யொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    மலர் முழுக்கு ஏற்பாடு களை கோவில் நிர்வாகம் மற்றும் திருமலை முருகன் பக்தர்கள் சங்கம் செய்து வருகிறது.

    • தங்க கவசம், வைர கிரீடம் பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
    • பக்தர்கள் பால் காவடி, மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி எடுத்து வந்து முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    திருவள்ளூர்:

    ஆடிக்கிருத்திகை விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் முருகன் கோவில்களில் குவிந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற்றது. இதை யொட்டி இன்று அதிகாலையே கோவில் நடை திறக்கப்பட்டு முருகருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் தங்க கவசம், வைர கிரீடம் பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார். இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டம் மற்றும் பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநி லங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து இருந்தனர்.

    பக்தர்கள் பால் காவடி, மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி எடுத்து வந்து முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    பக்தர்கள் அதிக அளவு குவிந்ததால் மலைக்கோவில் முழுவதும் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு இன்று மாலை, முதல் நாள் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. தொடர்ந்து நாளையும், நாளை மறுநாளும் தொடர்ந்து தெப்பஉற்சவம் நடைபெற உள்ளது. 3 நாட்கள் தெப்ப உற்சவத்தில் முருகர், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதில் திரளான பக்தர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதியில் இருந்து 240 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல் அரக்கோணம்-திருத்தணி இடையே சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகிறது. 1700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், பாகாசாலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், திருத்தணி ஆறுமுகசாமி கோவில் உள்ளிட்ட முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா விமரிசையாக நடைபெற்றது.

    சிறுவாபுரியில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மூலவருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடைபெற்றது. மூலவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பால்குடம், பால் காவடி, பன்னீர் காவடியுடன் பக்தி கோஷத்துடன் முக்கிய வீதிகளின் வழியாக கோவிலுக்கு வந்தனர். சிறப்பு வழிபாட்டில் இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட குழு உறுப்பினர் டி.லட்சுமி நாராயணன் பங்கேற்றார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர். பக்தர்கள் கூட்டத்தால் சிறுவாபுரி முருகன் கோவில் வளாகம் முழுவதும் நிரம்பி காணப்பட்டது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பொன்னேரி அடுத்த பெரும்பேடு பகுதியில் உள்ள முத்துக்குமரன்சுவாமி கோவிலில் ஊஞ்சல் சேவை, சிறப்பு பூஜை, அன்னதானம், சாமி ஊர்வலம் நடை பெற்றது.

    சென்னை, வடபழனி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 3 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு பள்ளியெழுச்சி பூஜைகள் நடந்தது. அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12 மணி வரை சந்தன காப்பு அலங்காரம், பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை 5மணி முதல் அபிஷேகம் மற்றும் புஷ்ப அங்கி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.

    அடிக்கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய கோவில் முன்பு குவிந்தனர். காவடி எடுத்தும், அலகு குத்தியும் "கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா" என்று பக்தி கோஷத்துடன் முருகனை தரிசனம் செய்தனர். ஏராளமானோர் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    வெயிலின் தாக்கமின்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் வகையில் வரிசையில் காத்து நின்று செல்லும் வழி முழுவதும் 'அரேபியன் டென்ட்' அமைக்கப்பட்டு உள்ளது .மேலும் வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், கை குழந்தையுடன் வருபவர்களுக்கு சிறப்பு பாதை அமைக்கப்பட்டு இருந்தன. அதேபோல் 3 இடங்களில் குடி தண்ணீர் பந்தல், தற்காலிக கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது. வாகனம் நிறுத்து வதற்கு தனி இடமும் ஒதுக்கீடு செய்து இருந்தனர்.

    இன்று இரவு வள்ளி தெய்வானை சமேதராக சுப்பிரமணியர் மாட வீதி புறப்பாடு நடக்கிறது. இரவு 11மணி வரை வடபழனி முருகனை தரிசிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

    காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் உள்ள குமரகோட்டம் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உற்சவர் முருகன், வள்ளி-தெய்வானையுடன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வல்லக்கோட்டை முருகன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில், வாலாஜாபாத் அருகே உள்ள இளைஞனார் வேலூர் முருகன் கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்கள் குவிந்து இருந்தனர். ஏராளமான பக்தர்கள் பால் காவடி, புஷ்பக் காவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 

    • முருகன் கோவிலில் இன்று காலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்து முருகனை தரிசனம் செய்தனர்.
    • பால் குடங்கள் எடுத்து வந்து முருகனை வழிபட்டனர்.

    கோபி:

    ஆடி கிருத்திகை முன்னிட்டு இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோவிலில் இன்று காலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்து முருகனை தரிசனம் செய்தனர். முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கோபி பச்சைமலை கோவிலில் இன்று காலை முதல் ஆடி கிருத்திகையை முன்னிட்டு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பால் குடங்கள் எடுத்து வந்து முருகனை வழிபட்டனர்.

    அப்போது கோபிசெட்டி பாளையம் அடுத்த கொங்கர்பாளையத்தை சேர்ந்த விவசாயி பெருமாள் சாமி என்பவர் இன்று காலை கோபி பச்சைமலை கோவிலுக்கு தனது 2 காளைகளுடன் வந்திருந்தார்.

    பின்னர் பால் குடத்துடன் பெருமாள் சாமி தனது 2 காளையுடன் 161 படிகளை ஏறி முருகனை வழிபட்டார். தனது மாடுகளுடன் முருகனை வழிபட வந்த பெருமாள் சாமியை கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    • கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
    • திருவாரூர், அரியலூர், கடலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமி நாதசாமி கோவில் உள்ளது.

    இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும்.

    தந்தையாகிய சிவபெருமானுக்கு 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததால் 'குரு உபதேச தலம்' என்ற சிறப்பும் பெற்றுள்ளது.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின், முருகனுக்கு மஞ்சள், பால், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடை பெற்று, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் தஞ்சை மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து, மாலை 7 மணிக்கு நேத்திர புஷ்கரணி குளத்தில் தெப்ப திருவிழா நடைபெற உள்ளது. சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி ஆகியோர் ஆலோசனைப்படி, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு பணியில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் சிவ.செந்தில்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர். விழாவை முன்னிட்டு தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், கடலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    • முருகன் கோவிலில் வெள்ளி வேல் திருட்டுபோனது.
    • கிராம மக்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர் கோவில் சாலையில் உள்ள கிடாரிப்பட்டியில் வெள்ளிமலையாண்டி முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பழமை வாய்ந்த 5 அடி உயர வெள்ளி வேல் பிரதிஷ்டை செய்து கிராம மக்கள் பாரம்பரியமாக வழிபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக கோவிலில் கட்டிட பராம ரிப்பு பணிகள் நடந்து வந்தன. இதன் காரணமாக வெள்ளிவேல் அங்குள்ள மண்டபத்தில் தகரத்தினால் மூடப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப் பட்டு இருந்தது. இந்த நிலையில் சம்பவத் தன்று இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பழமை வாய்ந்த வெள்ளி வேலை திருடிக் கொண்டு தப்பினர். இதனால் கோவில் நிர்வாகி கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து மேலவளவு போலீசில் புகார் செய்யப் பட்டது. சம்பவ இடம் வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களின் கைரேகைகளை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். வெள்ளி வேல் திருட்டு தொடர்பாக மர்ம நபர்க ளை போலீசார் தேடி வருகின்றனர். வெள்ளி மலையாண்டி முருகன் கோவிலில் பாரம்பரியமிக்க வெள்ளி வேல் திருட்டு போய் இருப்பது கிராம மக்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    • பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
    • முருகருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி , உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் ஆகிய கோவில்களில் கிருத்திகையொட்டி நேற்று முருகருக்கு சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • இந்த கோவிலின் தல வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.
    • சிக்கல் சிங்காரவேலவரை தரிசித்தால் சிக்கல்கள் யாவும் நீங்கிடும் என்பது ஐதீகம்.

    நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் எனும் ஊரில் ஸ்ரீவேல் நெடுங்கண்ணி அம்மன் சமேத ஸ்ரீநவநீதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 83- வது தலமாகும். 72 மாடக்கோவில்களில் ஒன்று மேலும், மாமன்னன் கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட 72 மாடக்கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலின் ராஜகோபுரம் சுமார் 80 அடி உயரத்தில் 7 நிலைகளை கொண்டுள்ளது.

    இங்கு சிங்காரவேலவர் (முருகன்) தனி சன்னதியிலும், கோமளவல்லி தாயார் சமேத ஸ்ரீகோலவாமன பெருமாள் தனிக்கோவில் கொண்டும் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். குழந்தைவரம் அருள்பவராக வீற்றிருக்கிறார். இங்கு முருகப்பெருமான் அம்மை, அப்பருக்கு நடுவில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அதனால், இங்கு சிங்காரவேலவர் குழந்தைவரம் அருள்பவராக வீற்றிருக்கிறார்.

    தலவிருட்சம் குடமல்லிகை. தீர்த்தம் அமிர்த தடாகம் என்றழைக்கப்படும் க்ஷீரபுஷ்குரணி (பாற்குளம்).ஸ்ரீகோலவாமனப் பெருமாள் நீராடி இத்தல இறைவனை வழிபட்ட தீர்த்தம் கயாதீர்த்தம், லட்சுமிதீர்த்தம் ஆகும். இதுபோல் சைவமும் ,வைணவமும் இணைந்த கோவில்கள் தமிழகத்தில் சில மட்டுமே உள்ளன. இக்கோவிலை பற்றி திருஞானசம்பந்தர் "மடங்கொள் வாளைகுதி கொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ் திடங்கொள்

    மாமறையோரவர் மல்கிய சிக்கலுள் விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப் பெருமானடி மேவிய அடைந்துவா மும்மடி யாரவர் அல்லல் அறுப்பரே" என தேவாரத்தில் பாடியுள்ளார். மேலும், இத்தல முருகனை பற்றி அருணகிரிநாதர் திருப்புகழில் 2 பாடல்கள் பாடியுள்ளார்.

    கோவிலின் தல வரலாறு

    இந்த கோவிலின் தல வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. விண்ணுலகத்தில் இருக்க கூடிய காமதேனு பசு ஒருமுறை பஞ்சம் காரணமாக மாமிசம் உண்டுவிட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த சிவபெருமான் அந்த பசுவிற்கு சாபம் வழங்கினார். சாபத்தினால் மிகவும் கவலையுற்ற காமதேனு, இறைவனிடம் இறைஞ்சி சாப விமோசனம் கோரினார். மனம் இறங்கிய சிவபெருமான் பூலோகத்தில் மல்லிகை வனம் உண்டு அங்குள்ள தலத்தில் நீராடி அங்குள்ள இறைவனை வணங்கினால் சாபம் நீங்கும் என அருளினார். அதன்படியே இன்றைய சிங்காரவேலவர் கோவில் அமையப்பெற்றுள்ள இடத்தில் உள்ள குளத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றார் காமதேனு.

    அதன் பொருட்டு காமதேனு பசுவின் மடியில் பெருகிய பால் பாற்குளத்தை உருவாக்கியது. அதுவே இன்றும் புனிதகுளமாக கருதப்படுகிறது. வசிஸ்ட மாமுனி, அந்த பாலில் இருந்து கிடைத்த வெண்ணையை கொண்டு அங்கேயே சிவலிங்கம் வடித்து வழிபட்டார். தன்னுடைய பூஜை முடிந்த பின்பாக அந்த சிவலிங்கத்தை அவர் எடுக்க முற்பட்ட போது அது சிக்கி கொண்டு வர மறுத்தது அதன் பொருட்டே இந்த ஊருக்கு சிக்கல் என பெயர் வந்தது என்ற நம்பிக்கையும் உள்ளது.

    சிக்கல் சிங்காரவேலவரை தரிசித்தால் சிக்கல்கள் யாவும் நீங்கிடும் என்பது ஐதீகம்.

    கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்கள்

    சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை பிரமோற்சவ விழாவும், ஐப்பசி மாதத்தில் நடைபெறும் கந்தசஷ்டி விழாவும், கார்த்திகை மாதத்தில் நடைபெறும் திருக்கார்த்திகை விழாவும் மிகவும் சிறப்புவாய்ந்ததாகும். இக்கோவிலில் தினமும் 6 கால பூஜைகள் நடைபெறும். இங்கு வேண்டிய பிரார்த்தனைகள் நிறைவேறியதும், வெண்ணெய்நாதருக்கு அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் உச்சிகால பூஜையின் போது வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.

    64 சக்தி பீடங்களில் ஒன்று

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த சிக்கல் சிங்காரவேலவர் கோவில் அம்மனின் 64 சக்தி பீடங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் அன்னை உமையவள் முருகப்பெருமானுக்கு சூரனை வதம் செய்ய சக்தி எனும் வேல் வழங்கியதால் வேல்நெடுங்கண்ணி எனும் சக்தியாயதாக்ஷியாக அருள்பாலிக்கிறாள். இங்கு மரகதலிங்கம் (மரகதவிடங்கர்) உள்ளது கூடுதல் சிறப்பாகும்.

    தரிசன நேரம்: காலை 6 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படும். தொடர்ந்து, மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    கோவில் அமைவிடம்

    இக்கோவிலுக்கு, வந்து தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினம் வந்தடைந்து, அங்கிருந்து நகர பஸ்களில் ஏறி 5 கி.மீ தூரம் உள்ள சிக்கல் என்ற ஊரில் இறங்கி கோவிலை வந்தடையலாம்.

    அல்லது, திருவாரூர் வந்தடைந்து அங்கிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ள சிக்கல் வந்து இறங்கி சாமி தரிசனம் செய்யலாம்.

    • ஓம் என்னும் பிரணவப் பொருளை சிவப்பெருமானுக்கு மட்டுமின்றி உலகுக்கே முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு.
    • முருகன் திருப்பெயர்கள் எண்ணிலடங்காது. ஆறுமுகப் பெருமானின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் சிறப்புடையது.

    சங்ககால புலவர் பெருமான், முருகனை பற்றி திருமுருகாற்றுப்படை என்னும் துதி நூலை பாடியிருக்கின்றார். அதன் மூலம் ஆறு திருத்தலங்கள், முருகனின் அறுபடை வீடுகள் என்ற சிறப்பை பெற்றுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    1.திருப்பரங்குன்றம்- சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகள் தெய்வானையை மணந்த திருத்தலமிது.

    2. திருச்செந்தூர் -அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகைச்சூடிய திருத்தலமிது.

    3. பழனி- மாங்கனிக்காக தமையன் விநாயக ரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுத பாணியாக நின்ற திருத்தலமிது.

    4. சுவாமிமலை- தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன் சுவாமியாக காட்சி தரும் திருத்தலமிது.

    5. திருத்தணி-சூரனை வதம் செய்த பின் சினம் தணிந்து குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.

    6.பழமுதிர் சோலை- அவ்வைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சி தரும் திருத்தலமிது.

    முருகன் தமிழ்க்கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். சரவணன், கார்த்திகேயன், குமரன், கந்தன், வடிவேலவன், சுப்பிரமணியன், சுவாமிநாதன், செந்தில்நாதன், ஆறுமுகன், சண்முகன் போன்ற பல பெயர்களால் அவர் அழைக்கப்படுகிறார்.

    புராணங்கள் இவரை சிவனின் மகனாக சித்தரிக்கின்றன. புராணங்களின்படி சிவனிட மிருந்து புறப்பட்ட தீப்பொறி, சரவண பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது. கார்த்திகைப் பெண்கள் 6 பேர், இந்த ஆறு குழந்தைகளை வளர்த்தனர். பின்னர் ஒரு கார்த்திகைத் திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார். ஆறுமுகங்களைப் பெற்ற இவர் ஆறுமுகன் என்று அழைக்கப்படுகிறார். கார்த்திகை மாத கார்த்திகைத் திருநாள் இவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    ஓம் என்னும் பிரணவப் பொருளை சிவப்பெருமானுக்கு மட்டுமின்றி உலகுக்கே முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு. ஓம் என்பது அ.உ.ம. என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையால் உண்டானது. அ-படைத்தல், உ-காத்தல், ம-ஒடுக்கல் என முறையே பொருள்படும். அ.உ.ம. என்னும் மூன்றும் இணைந்து உண்டான ஓம் எல்லா எழுத்துக்களுக்கும் எல்லா ஓசைகளுக்கும் எல்லா நூல்களுக்கும் மூலமாக உள்ளது. முருகு என்ற மூன்றெழுத்துகளிலும் அ.உ.ம. மூலமாக உள்ளதால் முருகன் ஓம்கார வடிவானவன். முருகப்பெருமான் அகத்தியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததாகவும், மதுரை தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராகவும் வீற்றிருந்து தமிழ் வளர்த்ததாகவும் கூறப்படுகிறது.

    தெய்வயானை கிரியா சக்தியாகவும், வள்ளி இச்சா சக்தியாகவும் வேல் ஞான சக்தியாகவும் மயில் ஆணவம் என்றும் சேவல் சிவஞானம் என்றும் கூறுவார்கள். முருகன் திருப்பெயர்கள் எண்ணிலடங்காது. ஆறுமுகப் பெருமானின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் சிறப்புடையது. அத்தகைய சிறப்புடைய முருகனை ஆடி கிருத்திகையில் வழிபட்டால் எல்லா வளமும் கிடைக்கும்.

    • சூரிய வழிபாடு மிகவும் தொன்மையான வழிபாடு.
    • கிருத்திகை நட்சத்திரகாரர்கள் சூரிய வழிபாடு செய்தால் சகல செல்வங்களும் பெறலாம்.

    கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய தெய்வம் முருகப் பெருமான், உரிய கிரகம் சூரியன். இந்த கிரகத்திற்குரிய அதிதேவதை சிவன். சிவனை வழிபட்டால் பல்வேறு செல்வ வளங்களை பெற்று மகிழ்ச்சி பெறலாம்.

    சூரிய வழிபாடு மிகவும் தொன்மையான வழிபாடு. கிருத்திகை நட்சத்திரகாரர்கள் சூரிய வழிபாடு செய்தால் சகல செல்வங்களும் பெறலாம். மயிலாடுதுறை அருகே உள்ள காத்ர சுந்தரேஸ்வரர் கோவில் கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்.

    கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் கிருத்திகை நட்சத்திரத்தன்றோ, பிரதோஷ நாட்களிலோ இந்தக் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வளம் பெறலாம் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ள கிருத்திகை நட்சத்திரப் பெண்கள் புண்ணிய நதிகள் தீர்த்தத்தால் இத்தல அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், சுமங்கலி பூஜை செய்தும் வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

    கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வெள்ளிக்கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திர நாட்களில் இந்தக்கோவிலில் தரிசனம் செய்தால் சிறந்த மணவாழ்க்கை அமையும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெள்ளிக் கிழமை அதிக நன்மைகள் தரும் தினமாக அமைந்திருக்கின்றது.

    இந்நாட்களில் கிருத்திகை நட்சத்திரத்தின் நல்ல மின் காந்த கதிர்வீச்சுகள் பூமியில் படரும் அது மிகவும் நல்லது. அத்தி மரம் கிருத்திகை நட்சத்திரத்திற்கு உரிய மரமாகும். இந்த மரத்தின் உடலில் பால் நிரம்பி இருக்கும். அந்தப் பால் கார்மேகங்களை தன் பக்கம் இழுக்கும் குணம் கொண்டது.

    இதன் குச்சிகளை எரித்தால் அதன் புகை மழை பொழியும் கருமேங்களை வரவழைக்கும் என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் கூறுகிறது.

    கிருத்திகை நட்சத்திரத்தின் கெட்ட கதிர் வீச்சுகள் மனித உடலில் படும் போது பல வகையான உடல் மாற்றம், மன மாற்றம் நோய்கள் உண்டாகின்றன. இதற்கு கிருத்திகை நட்சத்திர தோஷம் என்பார்கள். இந்த தோஷத்தையும், நோய்களையும் நீக்க இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அத்தி மரத்தை 20 நிமிடம் கட்டிப்பிடிக்கலாம் அல்லது அதன் நிழலில் உட்காரலாம்.

    கிருத்திகை தோஷம் உடையோர் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து காலையிலே வீட்டில் இருந்தவாறு சிவப்புப் பூவும் நீரும் கைகளில் ஏந்தி சூரிய பகவானே எனது தோஷத்தைப் போக்கியருளும் என வேண்டி பூவையும் நீரையும் சூரியனைப் பார்த்தவாறு பூமரத்தடியில் போட்டு வணங்கவும். 108 தடவைகள் இதனை செய்யலாம்.

    கோவிலில் சூரியனுக்கு அபிஷேகம் செய்யலாம். சர்க்கரைப் பொங்கல் நைவேதிக்கலாம். கோதுமைத் தானம் கொடுக்கலாம். சிவப்புப்பட்டு சிவப்புப் பூமாலை அணியலாம். சிவப்புப் பூவால் அர்ச்சித்து வழிபடலாம். தினமும் சூரிய கவசம் படிப்பது மிக்க பலனைத்தரும்.

    • ஆடிக் கிருத்திகை தினத்தன்று முருகனைப் போற்றி பிராத்தனைகள் நிறைவேற்றுவது வழக்கம்.
    • அனைத்து முருகன் தலங்களிலும் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    ஆடிக் கிருத்திகை முருகனுக்கு உகந்த நன்னாள். இந்நாளில் பக்தர்கள் காவடி எடுத்து தம் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அனைத்து முருகன் தலங்களிலும் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    கயிலை நாதனின் நெற்றிக் கண்ணிலிருந்து உதிர்ந்த ஆறு போறிகள் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக மாற அந்தக் குழந்தைகளை கார்த்திகை பெண்கள் எடுத்து சீராட்டி பாராட்டி வளர்த்தார்கள். உலக மக்களின் நன்மைக்காக உதித்த அந்த சரவணனை வளர்த்த கார்த்திகைப் பெண்களையும் சேர்த்து நினைவு கூறும் வகையில் ஆடிக் கிருத்திகை தினத்தன்று முருகனைப் போற்றி பிராத்தனைகள் நிறைவேற்றுவது வழக்கம்.

    குறிப்பாக திருத்தணியில் தெப்ப உற்சவம் ஆடிக்கிருத்திகையன்று ஆரம்பிக்கிறது. அரக்கர்களின் செருக்கழித்துமுருகன் ஓய்வெடுத்த திருத்தலம் திருத்தணி ஆகும். அந்த தினத்தில் இங்கு அரக்கர்கள் வீழ்ச்சிக்கும் மக்கள் மகிழ்ச்சிக்கும் வழிவகுத்துக் கொடுத்த இறைவனை நினைத்து பல்வேறு வழிபாடுகளை செய்வது பக்தர்களின் வழக்கம்.

    • கோவிலுக்கு செல்லும் சாலை பழுதடைந்து காணப்பட்டது.
    • வரும் 19-ந் தேதி முதல் சாலை சீரமைக்கும் பணிகள் முடியும் வரை மலைப்பாதையில் அனுமதி இல்லை.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்குமண்டலத்தில் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். மேலும் நாட்டில் வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது. இந்த நிலையில் கடந்த பல வருடங்களாக கோவிலுக்கு செல்லும் சாலை பழுதடைந்து காணப்பட்டது. இதனால் மலைக் கோவிலுக்கு வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

    இதையடுத்து 2 கி.மீ. தூரத்திற்கு இந்த மலைப்பாதையை புதுப்பிக்கும் பணியை சென்னையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் கடந்த ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி தொடங்கி வைத்தார். இதையடுத்து, இதற்கான பூமி பூஜை சிவன்மலை முருகன் கோவில் அடிவா–ரத்–தில் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து சாலை சீரமைக்கும் பணிகள் சில நாட்கள் நடைபெற்றது. பின்னர் தை மாதத்தில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த சமயத்தில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருவதால் சாலையை சீரமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் தற்போது மீண்டும் சாலை சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.

    இதுகுறித்து கோவில் உதவி ஆணையர் எம்.அன்னக்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :- சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மலைப்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் வரும் 19-ந் தேதி முதல் சாலை சீரமைக்கும் பணிகள் முடியும் வரை மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. பக்தர்கள் படி வழியை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×